search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன பேரணி"

    • காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.
    • வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் 26-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் மே மாதம் 7-ந்தேதியும் நடக்கிறது. கர்நாடகத்தில் கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, 18-ந்தேதி சிவமொக்காவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகிறார்.

    பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.

    இந்த கூட்டத்தில் மைசூரு-குடகு தொகுதி வேட்பாளர் மைசூரு மன்னர் யதுவீர், மண்டியா தொகுதி வேட்பாளர் குமாரசாமி, ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளர் பால்ராஜ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மைசூரு பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் மாலை 6 மணி அளவில் மங்களூருவுக்கு செல்ல உள்ளார். முதலில் மங்களூரு கோல்டு பிஞ்ச் சிட்டி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டு, தற்போது வாகன பேரணி (ரோடு ஷோ) நடக்கிறது. மைசூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வரும் பிரதமர் மோடி, சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். இந்த வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    லேடிஹில் நாராயணகுரு சர்க்கிளில் இருந்து தொடங்கும் இந்த வாகன பேரணி லால்பாக், மங்களூரு மாநகராட்சி அலுவலகம், பல்லால்பாக், எம்.ஜி.ரோடு, பி.வி.எஸ். சர்க்கிள், கே.எஸ்.ராவ் ரோடு வழியாக ஹம்பன்கட்டா சிக்னல் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் நடக்க உள்ளது. இந்த வாகன பேரணியில் சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகன பேரணியின் போது பா.ஜனதா வேட்பாளர் முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் பிரிஜேஷ் சவுடாவை ஆதரித்து மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.

    இந்த வாகன பேரணியையொட்டி மங்களூரு நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வாகன பேரணி நடக்கும் லேடிஹில் பகுதியில் இருந்து ஹம்பன்கட்டா சிக்னல் வரை பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் மங்களூரு பதற்றமான பகுதி என்பதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கர்நாடக வருகையையொட்டி பா.ஜனதாவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.
    • ஜந்தர் மந்தரில் நடந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் மேக்ரானும் பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.

    அதிபர் மேக்ரானை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில ஆளுநர், முதல் மந்திரி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இதையடுத்து, அதிபர் மேக்ரான் ஆம்பர் கோட்டை, ஹவா மகால் மற்றும் ஜந்தர் மந்தர் போன்ற சுற்றுலா தலங்களுக்குச் சென்றார். ஜந்தர் மந்தரில் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார்.

    இந்நிலையில், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் மேக்ரானும் பங்கேற்றார். சாலை நெடுகிலும் கூட்டமாக திரண்டிருந்த மக்கள் இரு தலைவர்களுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    • கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது
    • கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்ல ஆண்டு தோறும் கால்வாயை தூர் வார வேண்டும்

    பெருந்துறை

    ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள், கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது.

    இப்பேரணி கோபி அருகே உள்ள குருமந்தூரில் இருந்து புறப்பட்டு இறுதி யாக சென்னிமலையில் நிறைவடைந்தது. இப்பேர ணிக்கு பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில், பெத்தா ம்பாளையம் ரோடு பிரிவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு தண்ணீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

    நம்பியூர் அடுத்த குரும ந்தூர் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் 34 கசிவு நீர் திட்ட பாசன விவ சாயிகளை பாதுகாக்க கோரியும், கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நிறுத்த க்கோரியும், கால்வாயில் உள்ள பழைய கட்டுமான ங்களை உள்ளது உள்ளபடி சீரமைக்க வேண்டும்.

    கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்ல ஆண்டு தோறும் கால்வாயை தூர் வார வேண்டும் போன்ற பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி கீழ்பவானி பாசன பாது காப்பு இயக்கம் சார்பில் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேடு பகுதியில் கான்கிரிட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இருசக்கர வாகன பேரணி நடந்தது. பேரணியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த பேரணி நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் பகுதியில் இருந்து தொடங்கி கவுந்தப்பாடி, கோபி ச்செட்டிப்பாளையம், ஒத்த க்குதிரை வழியாக வந்து சென்னிமலையில் நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் மற்றும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 வது மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது.
    • இதனையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தது.

    ஒட்டன்சத்திரம்:

    தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 வது மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது. இதனையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தது. ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் முன்பு நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் வாகன பேரணிக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச்செய லாளர் ராஜாமணி, ஒட்ட ன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், நகராட்சி தலைவர் திருமலைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் பொன்ராஜ், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் ஹரி ஹரசுதன், துணை அமை ப்பாளர் ரவிசங்கர் உள்ளி ட்ட ஏராளமான நிர்வாகிகள் இரு சக்கர வாகன பேரணி க்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    • ராமநாதபுரத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது.
    • இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கான விழிப்பு ணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை (நவீன வாசக்டமி) வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி வரை அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகின்றன.

    இம்முகாமில் ஆண்க ளுக்கான குடும்பநல அறுவை (நவீன வாசக்டமி) சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுவரை தற்காலிக மற்றும் நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் உயர்வரிசை குழந்தை பட்டியலில் ஏராளமான தாய்மார்கள் உள்ளனர். சிலருக்கு குடும்பநல அறுவை சிகிச்சை ஏற்று கொள்ள முடியாத வகையில் உடல்நிலை பிரச்சினைகள் இருக்கும். இதனால் 49 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

    இப்படிப்பட்ட நிலையில் மருத்துவ சிக்கல் ஏற்பட்டு பிரசவத்தின்போது உயிர் இழக்கும் ஆபத்து ஏற்படு கின்றன. இதை தவிர்த்திடும் வகையில் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படு வதுடன் இத்தகைய சிறப்பு முகாம் தற்பொழுது நடை பெற்று வருகிறது. தகுதி யானவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் சிவானந்தவல்லி, இணை இயக்குநர் சகாய ஸ்டீபன் ராஜ், அலுவலக கண்கா ணிப்பாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணி நடந்தது.
    • இதில் பரமக்குடிக்கு வருகை தந்த இளைஞர்களுக்கு முருகேசன் எம்.எல்.ஏ. அசைவ விருந்து வழங்கினார்.

    பரமக்குடி

    தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.

    இதைெயாட்டி இளை ஞர் அணி மாநில மா நாட்டையொட்டி இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் இந்த இருசக்கர வாகன பேரணி செல்லும் நிலையில் நேற்று ராமநாதபுரத்திற்கு வருகை தந்தது.

    பேரணியில் 188 பேர் பங்கேற்றுள்ளனர். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணிக்கு முருகேசன் எம்.எல்.ஏ. தலைமையில் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இருசக்கர வாகன பேரணியில் வந்தவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஏற்பாட்டில் தனியார் கல்யாண மண்டபத்தில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    ஆட்டுக்கறி குழம்பு, நாட்டுக்கோழி கிரேவி, வஞ்சரம் மீன் வறுவல், சிக்கன், மீன் குழம்பு என விருந்து அளிக்கப்பட்டது. இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் உணவு பரிமாறினர்.

    • தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணி நடந்து வருகிறது.
    • தி.மு.க. கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவரும், வள்ளுவர் மண்டலத்தின் தென்மண்டல ஒருங்கிணைப் பாளருமான ஆர்.கே.கே.கார்த்திக் தலைமையில் வந்த தி.மு.க இளைஞரணி இருசக்கர வாகன பேரணியை வடக்கு நகர் தி.மு.க சார்பில் வடக்கு நகர் செயலாளரும்,நகர சபை தலைவருமான, ஆர்.கே.கார்மேகம் தலைமையில் தி.மு.கவினர் வரவேற்றனர்.

    தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதைெயாட்டி இளைஞர் அணி மாநில மாநாட்டை ஒட்டி இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் இந்த இருசக்கர வாகன பேரணி செல்லும் நிலையில் நேற்று ராமநாதபுரம் வருகை தந்தது.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு வருகை தந்த இருசக்கர வாகன பேரணிக்கு வடக்கு நகர் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.முன்ன தாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, கலைஞ ரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வடக்கு நகர் தி.மு.க. சார்பில் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கவுரவித்தனர்.

    இந்த நிகழ்வில் ராமநாத புரம் நகர் மன்ற துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம்,கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான்,மாவட்ட பொறி யாளர் அணி துணை அமைப்பாளர் பொறியாளர் கா.மருதுபாண்டி,கீழக்கரை இளைஞரணி துணை அமைப்பாளர் எபன்,உட்பட ராமநாதபுரம் வடக்கு நகர் தி.மு.க நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் தொடங்கிய பேரணி பாவூர்சத்திரம் வருகை தந்தது.
    • கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தென்காசி:

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந் தேதி நடை பெறுகிறது. இதனையொட்டி இளை ஞரணி நிர்வாகிகள் கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் திட்டமிட்டு இரு சக்கர வாகன பேரணியை நடத்தி வருகின்றனர். இந்த பேரணியானது தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு வருகை தந்தது.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் தொடங்கிய பேரணி பாவூர்சத்திரம் வருகை தந்தது.

    பேரணிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், கல்லூரணி ஊராட்சி தலைவர், குல சேகரப்பட்டி மதிச்செல்வன், நிர்வாகிகள் குருசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் தி.மு.க. ரைடர்ஸ் வாகன பேரணிக்கு எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மாநில உரிமை மீட்புக்கான 2-வது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    ராஜபாளையம்

    தி.மு.க இளைஞர் அணி சார்பில் மாநில உரிமை மீட்புக்கான 2-வது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் விதமாக, கடந்த 15-ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை ரைடர்ஸ் வாகன பேரணியை இளைஞரணி செலயாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 188 இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

    ராஜபாளையம் தொகு திக்கு வந்தடைந்த வாகன பேரணிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்எம்.குமார் முன்னிலையில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி சொக்க நாதன் புத்தூர் விலக்கில் பேர ணிக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ராஜபாளையம் வழியாக புதுப்பட்டி விலக்கு வரையில் சென்று இருசக்கர வாகனங்களை இயக்கி பேரணியை வழி அனுப்பி வைத்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணி கண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, இளங்கோவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
    • பேரணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர்.

    உடுமலை:

    தமிழ்நாடு விளையாட்டுதுறை அமைச்சரும் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் 17-ந் தேதி சேலத்தில் இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணியை கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    அந்த பேரணி உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தது. பேரணியை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், உடுமலை நகர தி.மு.க. செயலாளர் சி.வேலுச்சாமி, ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பேரணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து பேரணி உடுமலையில் இருந்து பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் புறப்பட்டு சென்றது.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், நகர மன்ற தலைவர் மு.மத்தீன், நகர துணை செயலாளர் வக்கீல் எஸ்.செந்தில்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் யு.என்.பி.குமார், எம்.ஆர்.பாபு, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.எம். தங்கராஜ் என்கிற எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி க.செந்தில்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பா.விக்ரம் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    நாளை நடக்கிறது

    கன்னியாகுமாரி: 

    அய்யா வைகுண்ட சுவாமி யின் 191-வது அவதார தினம் நாளை மறுநாள் (4-ந்தேதி) நடக்கிறது.

    அய்யா வைகுண்ட சுவாமி யின் அவதார தினத்திற்கு முந்திய தினமான நாளை (3-ந்தேதி) காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது. இந்தப் பேரணிக்கு ஜனா. வைகுந்த், பையன் அம்ரிஷ், கவுதம் ராஜ் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    இந்த பேரணி திருச்செந் தூர் சீர்காய்ச்சி, திசையன் விளை, உடன்குடி, கூடங் குளம், செட்டிகுளம், ஆரல் வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் வந்த டைகிறது. அதேபோல் நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு. பத்ம நாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து சாமிதோப்பை நோக்கி மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இந்த வாகன பேரணியை பாலலோகாதிபதி ெதாடங்கி வைக்கிறார். பையன் நேம்ரிஷ் தலைமை தாங்குகிறார்கள்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாற சாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார். நாகராஜா திடலில் நாளை இரவு 10 மணிக்கு மாசி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார்.

    வைகுண்ட சுவாமியின் அவதார தினமான நாளை மறுநாள் (4-ந்தேதி) காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கிப் புறப்படுகிறது. இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். ஜனாயுகேந்த் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை. வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடை கிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி யில் இருந்தும் வெளி மாநிலங் களில் இருந்தும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை மறுநாள் (4-ந்தேதி) இரவு சாமிதோப்பு தலைமை பதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.

    • அய்யா வைகுண்ட சுவாமியின் 191-வது அவதார தினம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது.

    தென்தாமரைகுளம்:

    அய்யா வைகுண்ட சுவாமியின் 191-வது அவதார தினம் நாளை மறுநாள் (4-ந்தேதி) நடக்கிறது.

    அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தினத்திற்கு முந்திய தினமான நாளை (3-ந்தேதி) காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது. இந்தப் பேரணிக்கு ஜனா. வைகுந்த், பையன் அம்ரிஷ், கவுதம் ராஜ் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    இந்த பேரணி திருச்செந்தூர் சீர்காய்ச்சி, திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் வந்தடைகிறது. அதேபோல் நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு, பத்ம நாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து சாமிதோப்பை நோக்கி மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இந்த வாகன பேரணியை பாலலோகாதிபதி தொடங்கி வைக்கிறார். பையன் நேம்ரிஷ் தலைமை தாங்குகிறார்கள்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாற சாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார்.

    நாகராஜா திடலில் நாளை இரவு 10 மணிக்கு மாசி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார்.

    வைகுண்ட சுவாமியின் அவதார தினமான நாளை மறுநாள் (4-ந்தேதி) காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்படுகிறது.

    இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். ஜனாயுகேந்த் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை மறுநாள் (4-ந்தேதி) இரவு சாமிதோப்பு தலைமை பதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.

    ×